Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: தமிழகம் மற்றும் புதுவையில் விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆடு வளர்ப்பு மற்றும் மகளிர் தற்சார்பு மேம்பாட்டிற்காகவும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது அஃக்ரோடெக் விவசாயிகள் ஒருங்கிணைத்த உற்பத்தியாளர் நிறுவனம்.
தற்போது கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில், முன்களத்தில் மக்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பயன் பெரும் விதமாக புதுவையில் உள்ள அனைத்து காவல் நிலையத்திற்கும் தேவையான மருத்துவ தற்பாதுகாப்பு பொருட்களான முக கவசம் மற்றும் கிருமிநாசினி வழங்க வேண்டும் என்று, அஃக்ரோடெக் நிறுவனத்தின் முதன்மை இயக்குனர் மாணிக்கம் வழங்க முடிவு செய்தார்.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த காவல் நிலையத்திற்கு இலவசமாக முக கவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காவல்துறை துணை ஆய்வாளர் ராஜேஷிடம், முககவசம் மற்றும் கிருமி நாசினி வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் தமிழக மற்றும் புதுவை மண்டல அதிகாரிகள் ஆனந்த்பாபு மற்றும் விஜய் மற்றும் கிளை அதிகாரி சிவசுப்ரமணி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.